யாழ்ப்பாணம் குறூப் நிருபர்
இந்தியாவின் தெற்கு பிராந்திய இராணுவத் தளபதி பி.எம். ஹரிஸ் தலைமையிலான இராணுவக்குழுவினர் நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்ததோடு, இந்திய இராணுவத்தினரின் நினைவிடங்களில் அஞ்சலியும் செலுத்தினர். 1987,- 89ஆம் ஆண்டுகளில் இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தில்
நிலைகொண்டிருந்தபோது இடம்பெற்ற மோதல்களில் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட இந்திய இராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக குறித்த இந்தியாவின் தெற்கு பிராந்திய இராணுவத் தளபதி அடங்கிய குழு யாழ்ப்பாணம் வருகைதந்துள்ளார் . முற்கட்டமாக யாழ் பலாலியில் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள இந்திய இராணுவத்தின் நினைவுத்தூபிக்கு அஞ்சலி செலுத்திய இந்தியாவின் தெற்கு பிராந்திய இராணுவத் தளபதி பி.எம்.ஹரிஸ் தொடர்ந்து யாழ் கோப்பாய் இராஜ வீதியில் அமைந்துள்ள உயிரிழந்த இந்திய இராணுவத்தினரின் சமாதிக்கும் சென்று மரியாதை செலுத்தியதுடன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கும் சென்ற குறித்த குழுவினர் கோவில் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.