கல்முனை ஆர் கே எம் பெண்கள் பாடசாலைக்கு செலான் வங்கியின் அன்பளிப்பு | தினகரன் வாரமஞ்சரி

கல்முனை ஆர் கே எம் பெண்கள் பாடசாலைக்கு செலான் வங்கியின் அன்பளிப்பு

செலான் வங்கியின் பின்தங்கிய நூலகங்களை மேம்படுத்தும் சமூகப்பொறுப்புணர்வு செயற்திட்டமான “செலான் பஹசர” வின் 130வது நூலகத்தை கல்முனை, ஆர்.கே.எம். பெண்கள் பாடசாலையில் நிர்மாணித்து மாணவர்களுக்கு கையளித்திருந்தது.

புதிதாக அமைக்கப்பட்ட இந்நூலகம் இணையப்பாவனை, e-கற்கை போன்ற நவீன வசதிகளை கொண்டுள்ளதுடன், பாடசாலையின் இதர மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்புகள் ஆகியன சுமார் 600க்கும் அதிகமான மாணவர்கள்் மற்றும் ஆசிரியர்களுக்கு அனுகூலமாக அமைந்திருக்கும்.

பட விளக்கம்: (இடமிருந்து) திரு. எஸ். மணிமாறன் - அதிபர், பி. கந்தசாமி – பிரதேச கல்வி அதிகாரி (DEO), எஸ். வேதாசலம் - ஓய்வுபெற்ற பிரதேச கல்வி அதிகாரி, . கே. ரஜேந்திரா – கிளை முகாமையாளர், செலான் வங்கி மட்டக்களப்பு, ஏ.ரமேஷ்குமார் - செயலாளர் பாடசாலை அபிவிருத்திச்சங்கம், திருமதி. ஐ.பி.மோகன்ராஜ் - கிளை முகாமையாளர், செலான் வங்கி கல்முனை, எஸ். உதயகுமாரன் - நிறைவேற்று அதிகாரி செலான் வங்கி பிஎல்சி, பிராந்திய அலுவலகம் ஆகியோர் காணப்படுகின்றனர். 

Comments