பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க, தனது இல்லத்தில் திடீரென ஏற்பட்ட விபத்து காரணமாக தீக்காயங்களுக்கு உள்ளாகி கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வீட்டில் எரிவாயு சிலிண்டரின் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் கீதா குமாசிங்கவின் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளதாக அதில் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.