ஒப்சேர்வர் ஊடகவியலாளர் காலமானார் | தினகரன் வாரமஞ்சரி

ஒப்சேர்வர் ஊடகவியலாளர் காலமானார்

சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த ஒப்சேர்வர் ஆசிரிய பீடத்தின் சிரேஷ்ட பத்திரிகையாளரும், பாதுகாப்பு நிருபருமான ரணில் விஜயபால (42) நேற்று காலமானார். ஹொரண தக்சிலா மத்திய கல்லூரியின் பழைய மாணவரான ரணில், 1997 ஆம் ஆண்டுடெய்லி நியூஸ் ஆசிரிய பீடத்தில் பத்திரகையாளராக இணைந்து பின்னர் அதன் செய்தி ஆசிரியரானார்.

தனது இண்டு தசாப்தகால பத்திரிகைத்துறை வாழ்வில் அவர் பாராளுமன்றம், அரசியல், குற்றவியல், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் தனது ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும் அவரது விசேட துறையாக பாதுகாப்பே இருந்துள்ளது. வாராந்தம் அவர் எழுதும் பாதுகாப்புக் கண்ணோட்டம் வாசகர்களால் மட்டுமல்ல பாதுகாப்புத்துறை சார்ந்தோராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் படைப்பாக இருந்தது.

ரணில், சண்டே ஒப்சேர்வரில் 2009 ஆம் ஆண்டில் இணைந்தார். அங்கு அவர் சிரேஷ்ட நிருபராக பணியாற்றியதோடு செய்தியாசிரியராகவும் தனது இறப்பு வரை பணியாற்றினார். 

Comments