பூநகரியில் விபத்து: ஒருவர் பலி: | தினகரன் வாரமஞ்சரி

பூநகரியில் விபத்து: ஒருவர் பலி:

கிளிநொச்சி குறூப் நிருபர்

 

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்லையாதீவு சந்தி பகுதியில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியிலிருந்து பூநகரி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பூநகரி பொலிசார் தெரிவிக்கின்றனர்.

விபத்து நடைபெற்ற இடத்திலிருந்த ஒரு நபர் நேற்று மதியத்திற்கு பின்னர் பொலிசாருக்கு வைத்தியசாலையில் வைத்து வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைவாக விபத்து பார ஊர்த்தியுடன் மோதுண்டு இடம்பெற்றிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பெயரில் பொலிஸ் தரப்பு சாட்சியாக இருந்த பாரவூர்தி சாரதியை கைதுசெய்துள்ளனர்.

பாரவூர்தியையும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் பொலிசார் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவிக்கின்றனர்

சம்பவ இடத்திலிருந்த நபர் தெரிவிக்கையில் விபத்தை தான் பார்க்கும்போது பாரவூர்தியில் அடிப்பட்டதற்கான தடயங்களும் காயங்களும் இருந்ததாகவும் இதனை தான் பொலிசாருக்கு தெரிவித்திருந்ததாகவும் உடனே தனது வாகனத்தில் ஏற்றிச் சென்றபோது இடையில் வருகைதந்த நோயாளர் காவுவண்டிக்கு மாற்றிவிட்டு அவரது உடைமைகள் இருப்பதை தெரிவித்து விட்டு சென்றதாக தெரிவித்தார்.

இவ் விபத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் வெளியிட்ட குடும்பத்தார் பொலிசார் உண்மையான குற்றவாளியைக் காப்பாற்ற முயல்வதாகவும் தெரிவித்து பொலிசாருடன் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி மற்றும் கிளிநொச்சிப் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Comments