அரசியல் நோக்கத்துடன் எதையும் செய்யவில்லை - | தினகரன் வாரமஞ்சரி

அரசியல் நோக்கத்துடன் எதையும் செய்யவில்லை -

சேலத்தில் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷை சந்தித்த சிம்பு, நான் அரசியல் நோக்கத்துடன் எதையும் செய்ய வில்லை என்று செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நடிகர்கள் நடத்திய போராட்டம் பயனற்றது என்று அதில் கலந்துகொள்ளாமல் சிம்பு புறக்கணித்தார். காவிரி பிரச்சினையில் அரசியல்வாதிகளை ஒதுக்கி விட்டு இரு மாநில மக்களும் சமாதானமாக பேசி தீர்க்க வேண்டும் என்றும் ஆலோசனை தெரிவித்தார்.சிம்புவின் கருத்துக்கு கர்நாடகாவில் பலர் ஆதரவு தெரிவித்தனர். அங்குள்ள தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்து தங்களுடைய ஒற்றுமையை நிரூபித்தனர்.

இந்நிலையில் நடிகர் சிம்பு சேலம் சென்றுள்ளார். அங்கு தூர்வாரப்பட்ட ஏரியை பார்வையிட்டார். அதன்பின் பேசிய சிம்பு, ‘காவிரி பிரச்சினை குறித்து நான் பேசியதற்கு சிறந்த ஆதரவு இருந்தது. சும்மா பேசிவிட்டு இருந்து விடாமல், ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. இதற்காக பியூஸ் மனுஷிடம் பேசினேன். அவர் நிறைய ஐடியாக்கள் கொடுத்தார். இதைப்பற்றி தெரிந்துக் கொள்வதற்காக சேலம் வந்தேன். நீர் நிலைகள், காடுகள் மற்றும் மலைகள் பாதுகாப்பு குறித்து விரைவில் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.

நான் அரசியல் நோக்கத்துடன் எதையும் செய்யவில்லை’ என்று கூறினார்.

Comments