குழந்தைகள் | தினகரன் வாரமஞ்சரி

குழந்தைகள்

மத்திய மாகாணத்திற்கான மாகாண மட்ட தமிழ் மொழித்தின போட்டி முடிவுகளின்படி தலவாக்கலை பாரதி மகாவித்தியாலயம் இரு போட்டிகளில் முதலிடத்தை பெற்று தேசியமட்ட போட்டிகளுக்குத் தெரிவாகி முதற் தடவையாக சாதனை படைத்துள்ளது. அதற்கமைய பிரிவு 4இல் தமிழ் இலக்கண போட்டியில் ஜே. வினோதினியும் தமிழ் அறிவு வினாவிடைப் போட்டியில் கே. யாழினி, ஆர். தர்ஷிகா, த. நிரோஷா, எஸ். பத்மலக்ஷ்மி, எம். பிரசாந்த் ஆகியோர் முதலிடத்தை பெற்று தேசிய மட்டத்திலான போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளனர். இப்போட்டிகளுக்கு மத்திய மாகாணத்திலுள்ள 15 கல்வி வலயங்களைச் சேர்ந்த முதலிடத்தை பெற்றவர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. டி. சுரேன், தலவாக்கலை

Comments