'சிலுமின', 'ரெச' பிரதம ஆசிரியர் சாமர லக்‌ஷான் காலமானார் | தினகரன் வாரமஞ்சரி

'சிலுமின', 'ரெச' பிரதம ஆசிரியர் சாமர லக்‌ஷான் காலமானார்

நமது சகோதர பத்திரிகைகளான 'சிலுமின', 'ரெச' ஆகிய பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் சாமர லக்‌ஷான் நேற்று காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 39 ஆகும். திடீர் சுகவீனமுற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாமர லக்‌ஷான் நேற்று இரவு உயிரிழந்தாரென உறவினர்கள் தெரிவித்தனர்.

மிகச் சிறிய வயதில் இரண்டு தேசியப் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியராகப் பணிபுரிந்த சாமர மிகவும் துடிப்புள்ள இளம் ஊடகவியலாளராவார்.

மத்துகம கன்னங்கர மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர், 'ரிவிர' சிங்களப் பத்திரிகையில் தனது ஊடகப் பணியை ஆரம்பித்தார். அரசியல் துறையில் பட்டதாரியான இவர், சிங்களத்தில் திறமையான எழுத்தாற்றல் பெற்றவர். மிகக் குறுகிய காலத்தில் ரெச, சிலுமின பத்திரிகைகளில் அதிரடி மாற்றங்களை செய்த இவர், பத்திரிகை விற்பனையிலும் சாதனையை ஏற்படுத்தினார்.

இவரது பிரிவு அவரது குடும்பத்தாருக்கு மட்டுமல்ல, லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கும் பாரிய இழப்பாகும். அன்னாரது, ஆத்மா சாந்தியடைய தினகரன், தினகரன் வாரமஞ்சரி ஆசிரியபீடமும் பிரார்த்திக்கின்றது.

Comments