ஆண்தேவதை படத்தை வெளியிடத் தடை | தினகரன் வாரமஞ்சரி

ஆண்தேவதை படத்தை வெளியிடத் தடை

தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி - ரம்யா பாண்டியன் நடிப்பில் உருவாகி இருக்கும் 'ஆண் தேவதை' படத்தை வெளியிடக் கூடாதென சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிகரம் சினிமாஸ் சார்பில் அ.பக்ருதீன், ஷேக் தாவூத் மற்றும் சைல்ட் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் முஸ்தபா, குட்டி இணைந்து தயாரித்துள்ள படம் 'ஆண் தேவதை'.

சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் கணவன், மனைவியாக நடித்திருக்கும் இந்த படத்தில் ராதாரவி, இளவரசு, காளி வெங்கட், சுஜா வருணி, ஹரீஷ் பேரடி, அபிஷேக், கவின், பேபி மோனிகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜிப்ரான் இசையில், விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், படத்தை ​வெளியிடக் கூடாது என்று படக்குழுவுக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட தயாரிப்பு பணிகளுக்காக பெற்ற கடன் தொகையில், ரூ. 22 லட்சத்தை திருப்பி தராததால் படத்துக்கு தடை கோரி நிஜாம் மொய்தீன் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Comments