லக்ஷ்மி பரசுராமன்
சுமார் 02 கிலோ 426 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வந்த பாகிஸ்தான் பிரஜையொருவர் நேற்று அதி காலை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (13) அதிகாலை 2.25 மணியளவில் தோஹாவிலிருந்து வந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை விமான நிலைய போதை ஒழிப்பு பிரிவினர் அவதானித்துக் கொண்டிருந்தபோது 38 வயதான பாகிஸ்தான் பிரஜையொருவரின் பயணப் பொதிகளை சோதனையிட்டனர்.
இதன்போதே, இந்நபர் தனது பயணப்பைக்குள் மிக சூட்சுமமாக மறைத்து வைத்திருந்த 02 கிலோ 426 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. இதன் பெறுமதி சுமார் 03 கோடி ரூபாயெனப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் 38 வயதான பாகிஸ்தானிய பிரஜை என பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.