அண்ட சராசரம்
அளந்து தெளிந்து
விந்தை புரிபவனும்
கந்தை உடலதன்
காயங்கள் சரி செய்து
பங்கம் களைபவனும்
அன்பு வழி செல்ல
அறநெறி புகட்டிடும்
ஆசான் குலத்தினரும்
அரண்காக்கும் அரசன்
அமைச்சன் நல்தலைவன்
ஆட்சிப் பெருமக்களும்
மாசு மரு நீக்கும்
மருந்தாக உரம் கொள்ள
அருந்திடும் பானம் என்ன?
அது எழுத்தறிவென்னும்
அட்சய பாத்திரம்
உட்சென்ற கலவை ஒன்றே!!!