அட்சய பாத்திரம் | தினகரன் வாரமஞ்சரி

அட்சய பாத்திரம்

அண்ட சராசரம்

அளந்து தெளிந்து

விந்தை புரிபவனும்

கந்தை உடலதன்

காயங்கள் சரி செய்து

பங்கம் களைபவனும்

அன்பு வழி செல்ல

அறநெறி புகட்டிடும்

ஆசான் குலத்தினரும்

அரண்காக்கும் அரசன்

அமைச்சன் நல்த​லைவன்

ஆட்சிப் பெருமக்களும்

மாசு மரு நீக்கும்

மருந்தாக உரம் கொள்ள

அருந்திடும் பானம் என்ன?

அது எழுத்தறிவென்னும்

அட்சய பாத்திரம்

உட்சென்ற கலவை ஒன்றே!!!

Comments