ரூபா 2,50,000 கள்ள நோட்டுகளுடன் புத்தளம் இளைஞன் வவுனியாவில் கைது | தினகரன் வாரமஞ்சரி

ரூபா 2,50,000 கள்ள நோட்டுகளுடன் புத்தளம் இளைஞன் வவுனியாவில் கைது

வவுனியாவில் இரண்டு 2,50,000 கள்ள நோட்டுக்களுடன் இளைஞர் ஒருவரை நேற்று பகல் 2 மணியளவில் கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர்

அனுர அபயவிக்கிரமவின் ஆலோசனையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டீ.எம். தென்னக்கோனின் நெறிப்படுத்தலில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மஹிந்த வில்வ ஆராய்ச்சி தலைமையில் சிறு குற்றத்தடுப்பு பொலிசார் வவுனியா, தேக்கவத்தை பகுதியில் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது 5000 ரூபா கள்ள நோட்டுக்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான 5000 ரூபாய் கள்ள நாணய நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன.

இதனை வைத்திருந்த புத்தளம், மதுரங்குளி, ஜின்னாவத்தை பகுதியைச் சேர்ந்த முகமட் சப்ராஸ் (வயது 24) என்பவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் இந் நபரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும்தெரிவித்தனர்.

Comments