2020 ஆசிய கிண்ண ரி 20 தொடர்: நடத்தும் உரிமை பாகிஸ்தானுக்கு | தினகரன் வாரமஞ்சரி

2020 ஆசிய கிண்ண ரி 20 தொடர்: நடத்தும் உரிமை பாகிஸ்தானுக்கு

2020 ஆசிய கோப்பை ரி 20 கிரிக்கெட் தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. ஆனால் போட்டி எங்கு நடைபெறும் என்பது தெரிவிக்கப்படுவதில்லை.

ஆசிய கிண்ண 50 ஓவர் கிரிக்கெட் தொடர் சமீபத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றது. இந்த தொடர் இந்தியாவில்தான் நடைபெறுவதாக இருந்தது. பாகிஸ்தான் இந்தியா வர மறுப்பு தெரிவித்ததால் மாற்றப்பட்டது. தற்போது 50 ஓவர் கிரிக்கெட் தொடர் 20 ஓவராக மாறியுள்ளது. இந்த தொடர் 2020-ல் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் ரி 20 உலகக் கிண்ணத்துக்கு முன் நடைபெற இருக்கிறது.

இந்த தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் கிரிக்கெட் தொடர் நடைபெறுவதில் சிக்கல் நீடித்து வருவதால் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற வாய்ப்புள்ளது.

 

Comments