புதிய மலரொன்று பூத்தது! | தினகரன் வாரமஞ்சரி

புதிய மலரொன்று பூத்தது!

புதிதான மலரொன்று

பூத்தது -−அது

புன்னகை சிந்தியே

பார்த்தது

அழகான உறவொன்று

பிறந்தது −இனிய

அன்போடு வாழ்ந்திடவே

உதித்தது...!

கருவிழிகள் குண்டாக

இருந்தது −சிறு

கன்னங்களும் எழிலாக

விரிந்தது

சின்னஞ்சிறு காலாலே

உதைத்தது −வண்ண

சித்திரம் போல் சிறுவாயால்

சிரித்தது!

நிலவோடு முகமாகி

ஒளிர்ந்தது −வெண்

மலரோடு மணமாக

இணைந்தது

தமிழோடு இசையாக

கலந்தது −என்

கவியோடு ஒலியாக

தவழ்ந்தது

உயிரோடு உயிராக

மிளிர்ந்தது −என்

உறவுக்குப் 'பேத்தி'யாய்

வளர்ந்தது

Comments