புதிதான மலரொன்று
பூத்தது -−அது
புன்னகை சிந்தியே
பார்த்தது
அழகான உறவொன்று
பிறந்தது −இனிய
அன்போடு வாழ்ந்திடவே
உதித்தது...!
கருவிழிகள் குண்டாக
இருந்தது −சிறு
கன்னங்களும் எழிலாக
விரிந்தது
சின்னஞ்சிறு காலாலே
உதைத்தது −வண்ண
சித்திரம் போல் சிறுவாயால்
சிரித்தது!
நிலவோடு முகமாகி
ஒளிர்ந்தது −வெண்
மலரோடு மணமாக
இணைந்தது
தமிழோடு இசையாக
கலந்தது −என்
கவியோடு ஒலியாக
தவழ்ந்தது
உயிரோடு உயிராக
மிளிர்ந்தது −என்
உறவுக்குப் 'பேத்தி'யாய்
வளர்ந்தது