மண்ணில் நல்ல வண்ணம் | தினகரன் வாரமஞ்சரி

மண்ணில் நல்ல வண்ணம்

அகம் பாவமின்றி

அடக்கமான குணத்துடன்

அகத்தில் மெய்

அன்பு கொண்டு

அடுத்தவரை

அவதூறுபடுத்தாமல்

சந்தேகப் பட்டு

மற்றவர்களை

சஞ்சலத்தில் ஆழ்த்தாமல்

பொறாமைக் கொண்டு

பொசுக்காமல்

சுயநலத்துடன்

சுற்றியுள்ளவர்களை

வதைக்காமல்

உதவி புரியாவிடினும்

உபவத்திரம் கொடுக்காமல்

அகம் என்னும்

உண்டியலில்

அழுக்கு எண்ணம்

சேர்க்காமல்

நினைவு நல்லது

கொண்டு

நிதானம் தவறாமல்

அமைதியாய் வாழ்ந்தால்

மண்ணில் நல்ல

வண்ணம் வாழலாம்

Comments