ஊடக நிறுவனங்களையும் ஊடகவியலாளர்களையும் அடக்குவதற்கு முயற்சித்த குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் கோரிக்ைக விடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், சுதந்திர ஊடக இயக்கம் உள்ளிட்ட ஊடக அமைப்புகள் எதிர்வரும் 29ஆம் திகதி இந்த முறைப்பாட்டை உத்தியோகபூர்வமாகப் பொலிஸ் சேவை ஆணைக்குழுவிடம் கையளிக்கவுள்ளன.
அன்றைய தினம் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திலும் முறைப்பாடொன்றைப் பதிவு செய்வதற்கும் நடவடிக்ைக எடுக்கப்பட்டுள்ளது.ஊடக அடக்கு முறைக்கு எதிராக நடவடிக்ைக எடுக்கப்படும் என்று கடந்த 2015 தேர்தலில்
வாக்குறுதியளித்தபடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று ஊடக அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.