கிழக்குப் பல்கலை துணைவேந்தராக ராகல் நியமனம் | தினகரன் வாரமஞ்சரி

கிழக்குப் பல்கலை துணைவேந்தராக ராகல் நியமனம்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக அதே பல்கலைக்கழகத்தின் பௌதீகவியற்றுறைப் பேராசிரியர் எவ். சீ. ராகல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழத்தின் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் ரி.ஜெயசிங்கத்தின் பதவிக்காலம் எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், புதிய துணைவேந்தரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த மாதம் முதலாம் திகதி இடம்பெற்றது.

பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களிடையே நடாத்தப்பட்ட வாக்கெடுப்பின் முடிவில் பேராசிரியர் எவ். சீ. ராகல் முதனிலையில் தெரிவாகினார்.

இவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிறப்பு பௌதீகவியல் பட்டதாரி ஆவார். இவர் 1998 ஆண்டு முதல் 2011 ஆண்டு வரையும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகவும், சிரேஷ்ட விரிவுரையாளராகவும் கடமையையாற்றியுள்ளதுடன், 2011 ஆம் ஆண்டு முதல் இன்றுவரையும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.

தென்னாபிரிக்கா நாட்டில் சிறப்பு பௌதீகவியல் கலாநிதி பட்டத்தை முடித்துள்ளார். 2016 ஆண்டு தனது பேராசிரியராகப் பட்டத்தைப் பூர்த்தி செய்துள்ளார். மட்டக்களப்பு புளியந்தீவை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துணைவேந்தர் ராகல், அம்பாறை பாடசாலை, மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலயம், குருநாகல் பாடசாலைகளின் பழைய மாணவர் ஆவார்.

ஜனவரி 22 ஆம் திகதி முதல் இவர் புதிய துணைவேந்தராக நியமனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments