நாளொன்றுக்கு 1,350 மோட்டார் சைக்கிள்களும், 325 மோட்டார் வாகனங்களும் புதிதாக வீதி போக்குவரத்துக்குள் உள்வாங்கப்படுவதாக மோட்டார் வாகன பதிவாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள வீதிக் கட்டமைப்புக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையிலும் இவ்வாறு புதிது புதிதாக வாகனங்கள் தினமும் போக்குவரத்துக்குள் வந்த வண்ணமேயுள்ளன
என்றும் அவர் தெரிவித்தார். கடந்தாண்டு மட்டும் 3,39,763 மோட்டார் சைக்கிள்களும் 80,773 மோட்டார் வாகனங்களும் பதிவாகியுள்ளன. கடந்த வருடம் மட்டும் அனைத்து வகையான வாகனங்கள் பதிவு தொர்பில் பார்க்கும்போது 4,80,763 வாகனங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 2012 முதல் 2016 வரையிலான காலப்பகுதியில் வான் ரக வாகனங்களின் பதிவு அதிகரித்து காணப்பட்டது. எனினும் 2017-2018வரையிலான காலப்பகுதியில் வான் ரக வாகனங்களின் பதிவு பாதியளவில் குறைவடைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.