மெய்வல்லுனர் பயிற்சியாளர் பாடநெறிக்கான விண்ணப்பம் கோரல் | தினகரன் வாரமஞ்சரி

மெய்வல்லுனர் பயிற்சியாளர் பாடநெறிக்கான விண்ணப்பம் கோரல்

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பயிற்சியாளர்களுக்கான தரம் - 1 இற்கான பாடநெறிகள் எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதிமுதல் மார்ச் 17ஆம் திகதிவரை கொழும்பில் நடைபெறவுள்ளது.

இப்பாடநெறியில் கலந்து கொள்ள ஆர்வமுடையவர்கள் தமது விண்ணப்பப் படிவங்களை கொழும்பு 07, டொரிங்டன் அவனியூ, இலக்கம் 33 என்ற முகவரியில் அமைந்துள்ள இலங்கை மெய்வல்லுனர் சம்மேளன தலைமைக் காரியாலயத்திலிருந்து அனுப்பிவைக்குமாறு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் செயலளார் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையே, தற்போது பயிற்சியாளர்களாக செயற்பட்டுகொண்டிருக்கின்ற ஆனால்,மெய்வல்லுனர் பயிற்சியாளர் பாடநெறியை பூர்த்தி செய்யாதவர்களும்,தேசிய மட்டத்தில் வீரர்களை உருவாக்கி தற்போது வீரர்கள் அல்லாமல் பயிற்சியாளர்களாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றவர்களுக்கும் இப்பாடநெறியில் முன்னுரிமை கொடுக்கப்படும் என இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், இம்மாதம் 20ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதுடன்,பாடநெறிக் கட்டணமாக 15 ஆயிரம் ரூபா அறிவிடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பீ.எப்.மொஹமட்

Comments