விடிவைத் தருவாள் என
விருந்து வைத்து வரவேற்று
விளம்பியவள் விடை காணா
வினாவுடன் விடைபெற
பட்டாசுகள் முழங்கிட
பட்சிகள் ராகம் இசைத்திட
ஆலய மணியோசையுடன்
அழகு நங்கை விகாரி
அகிலத்தில் அடியெடுத்து வருகிறாள்
தேசத்தின் ஒற்றுமை ஓங்க
செங்கதிர் தீங் கரும்பும்
விளைந்து செல்வம் தழைந்தோங்க
வீடுமனை செழிப்புற
சிங்கார விகாரி வருகிறாள்
பொய்த்திட்ட மும்மாரி
பொழிந்து களனிகள் களிப்புற
உவகையுடன் உழர் ஏர் எடுத்து
உழுது பண்படுத்த ஓடிட
ஒய்யார விகாரி வருகிறாள்
நாடூர நாமும் வாழ
நல் வளங்கள் நல்ரூர
நங்கை விகாரியை
இருகரம் கூப்பி
வரவேற்போம்
மங்களம் மனோரஞ்சன்
கல்முனை