தயாசிறி ஜயசேகரவிடம் 3 மணிநேரம் வாக்குமூலம் | தினகரன் வாரமஞ்சரி

தயாசிறி ஜயசேகரவிடம் 3 மணிநேரம் வாக்குமூலம்

வடமேல் மாகாண வன்முறைகள்;

வடமேல் மாகாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவிடம் நேற்று மூன்று மணி நேரம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.  

கொழும்பு மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அலுவலகத்திலேயே தயாசிறி ஜயசேகர வாக்குமூலம் அளிப்பதற்காக வருகைதந்திருந்தார்.

குளியாப்பிட்டி உட்பட வடமேல் மாகாணத்தின் பல பகுதிகளிலுள்ள முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மீது கடந்த 13ஆம் திகதி தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.  

இந்த வன்முறைச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிலர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்களின் பின்புலத்தில் தயாசிறி ஜயசேகர உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.  

இந்த விடயம் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காகவே அவரிடம் நேற்று வாக்குமூலம் பதியப்பட்டுள்ளது.   

சுப்பிரமணியம் நிஷாந்தன் 

 

Comments