யாழ்.பல்கலை அனைத்து பீடங்களும் 22 இல் மீள ஆரம்பம் | தினகரன் வாரமஞ்சரி

யாழ்.பல்கலை அனைத்து பீடங்களும் 22 இல் மீள ஆரம்பம்

யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம் தவிர்ந்த அனைத்துப் பீடங்களையும் சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் 22ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக பதிவாளர்   வி. காண்டீபன் அறிவித்துள்ளார்.  

கலைப்பீடம் (இராமநாதன் நுண்கலைப் பீடம் உட்பட), விஞ்ஞானபீடம், முகாமைத்துவ மற்றும் வணிகபீடம், விவசாயபீடம், பொறியியல் பீடம், தொழில்நுட்ப பீடம், ஆகிய பாடங்களுக்கும் சித்த மருத்துவ அலகுக்குமான கல்வி நடவடிக்கைகளே 22ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன.  

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி முதல் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளில் மருத்துவபீடம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் அனைத்துக்குமான பரீட்சைகள் எதிர்வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமையிலிருந்து ஆரம்பமாகி நடைபெறவுள்ளன. 

விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் திரும்புமாறும், விடுதிகளின் உள்ளேயும், பல்கலைக்கழகத்தின் சகல பகுதிகளிலும் மாணவர்கள் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில், பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது ஆவணம் ஒன்றை எடுத்துவரவேண்டும் என்றும் பதிவாளர் தனது அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளார்.  

Comments