குருநாகல் மருத்துவர் ஷாபி தொடர்பான அறிக்​​கை​ 27இல் | தினகரன் வாரமஞ்சரி

குருநாகல் மருத்துவர் ஷாபி தொடர்பான அறிக்​​கை​ 27இல்

குருநாகல் வைத்தியர் சேகு சியாப்தின் மொஹமட் சாபி, சிங்களப் பெண்களுக்கு கருத்தடை செய்துள்ளாரா? இல்லையா? என்பது தொடர்பிலான உண்மைத்தன்மை எதிர்வரும் 27ஆம் திகதி வெளிப்படுத்தப்படவுள்ளன. வைத்தியர் சாபி தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகள் மற்றும் பரிசோதனைகளைக் குறித்த மதிப்பீட்டை குருணாகல் வைத்தியசாலை எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்கவுள்ளது.

அதன் பின்னர் இதுதொடர்பில் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள முடியுமென குற்றப்புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வைத்தியர் சாபியிடம் சிசேரியன் செய்துகொண்ட பெண்களுக்கு கொழும்பு காசல் மற்றும் சொய்சா வைத்தியசாலையில் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. அதன் மதிப்பீடுகளை நீதிமன்றுக்கு பெற்றுக்கொடுக்க குறித்த வைத்திசாலைகள் நடவடிக்கையெடுக்குமென அங்குள்ள உயர் அதிகாரிகளிடம் அறிய முடிந்தது.

Comments