- 356 மீற்றர் உயரம், 4நிலக்கீழ் மாடிகள்
- 90 ஆவது மாடிக்கு 2நிமிடத்தில் பயணம்
- 10 ஏக்கர் விஸ்தாரண நிலம்
- 1500 வாகனங்கள் நிறுத்தக் கூடிய பாரிய தரிப்பிட வசதி
- 50 வானொலி நிலையங்கள்
- 50 தொலைக்காட்சி நிலையங்கள்
- 20 தொலைத்தொடர்பு நிலையங்களுக்கு வசதி
கொழும்பு நகரத்திற்குள் பிரவேசிக்கும் ஒவ்வொருவரின் கண்கணுக்கும் எட்டிய தூரத்திலிருந்து தெரிய கூடியதாக தாமரைக் கோபுரம் அமைந்துள்ளது.
இதன் நிர்மாணப் பணிகள் 2012ஆம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டன.
இக்கோபுரத்தை பார்ப்பவர்களின் மனத்தில் எவ்வாறு இந்தளவு உயரமாக கட்டப்பட்டது, இவ்வளவு பெரியதான கோபுரத்தில் ஆட்கள் எப்படி வேலை செய்வார்கள்? இவ்வளவு பெரியதான கோபுரம் ஏன் கட்டப்பட்டது? எனப் பலகேள்விகள் உருவாவது பொதுவானதே.
இக்கோபுரம் கொழும்பு, டி. ஆர். விஜயவர்தன மாவத்தையில் பேர வாவிக்கு மிக அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இக்கட்டிடத்தின் 215மீற்றர் உயரத்திற்கு லிப்ட்டினூடாக செல்வதற்கு சுமார் 2நிமிடங்களே எடுக்கின்றன.
இக்கோபுரத்தினூடாக எமது நாட்டுக்குப் புகழ் கிடைப்பதுடன் கொழும்பு நகரின் அழகை மேன்மைப்படுத்தும் கோபுரமாகவும் இது திகழும்.
ஆனால் தாமரைக் கோபுரத்தின் முழுமையான உயரம் 356.3மீட்டராகும். இக்கோபுரம் தென் ஆசியாவின் மிக உயரமான கோபுரமாகும்.
அத்துடன், உலகிலேயே உயரமான கோபுரங்களில் ஒன்றாக இதுவும் காணப்படும்.
இத்தாமரைக் கோபுரத்தில் முதலாம் மாடியில் வர்த்தக் கடைத் தொகுதிநிர்மாணிக்கப்பட்டுள்ளது.
மேல் பகுதியில் 400பேர் அமரக்கூடிய மாநாட்டு மண்டபமும். திருமண வரவேற்பு மண்டபம், ஆடம்பர அறைகள், ஹோட்டல்கள், மற்றும் கவனயீர்ப்பு பார்வையாளர் மண்டபம் உட்பட பூரண வசதிகள் நிறைந்ததாக இது காணப்படுகிறது.
அத்துடன், தொலைத்தொடர்பாடல்கள் அருங்காட்சியகம் மற்றும் உணவு விடுதி போன்றன கோபுரத்தின் அடித்தளத்தில் அமைக்கப்படுகின்றன.
கோபுரத்தின் நிர்மாணப் பணிகளில் சீனருடன் இலங்கை ஊழியர்களும் இணைந்து பணியாற்றினர்.
பல்வேறு பரிவர்த்தனை நிலையங்களை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள இந்தத் தாமரைக் கோபுரம் ஆசியாவிலேயே மிகவும் உயரமான தாமரை வடிவிலான அமைக்கப்படும் கோபுரமாகவும் திகழவிருக்கிறது.
தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்தத் தாமரைக் கோபுரத்துக்காக ஒதுக்கப்பட்ட மொத்த செலவினம் 104மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இதில் 1500வாகனங்களை ஒரே தடவையில் நிறுத்தி வைக்கக் கூடியதாக பாரிய வாகனத் தரிப்பிடம் ஒன்றும் வர்த்தக கட்டடத் தொகுதியும் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
சீனாவின் எக்சிம் வங்கியின் நிதியுதவியுடன் 104.3மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட தாமரைக் கோபுரம், 1148.3அடி உயரத்தையும் 30,600சதுர மீற்றர் விஸ்தீரணத்தையும் கொண்டதாக உள்ளது.
தாமரைக் கோபுரத்தில் அயல்நாடுகளுக்கு எதிரான மின்னணு கண்காணிப்பு வசதி அடங்குவதாகவெளியான செய்தி நிராகரிக்கப்பட்டுள்ளது.
இக்கோபுர பணியில் மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் 50பொறியியலாளர்களும் பணியாற்றிஇருந்தார்கள்.
கட்டிட நிர்மாணத்திற்கு இரும்பு 5000டொன், கொங்கிறீட் 20,000கனமீட்டரும் உள்வாங்கப்பட்டுள்ளது.
இக்கோபுரத்தைச் சுற்றிலும் பேரவாவி இருப்பதினால் அத்திரவாரப் பகுதியின் ஸ்திரத்திற்கு ஆரம்ப கட்டங்களில் 4000கனமீட்டர் கொன்கிறீட்டும், 400தொன் இரும்பும் செலவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இத்தாமரை கோபுரத்தில் வானொலி மற்றும் தொலைகாட்சிகளுக்காக 350மீட்டர் உயரமான பரிவர்த்தனை கோபுரங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், கண்காணிப்பு கூடம், தொலைத்தொடர்பு பரிவர்த்தனை நிலையங்கள் அனைத்தும் உள்ளடக்கியதாகவே அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோபுரத்திற்கு அதிவேக மின்சார லிப்டுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 85 முதல் 90 வரையிலான மாடிகளுக்கு சுமார் இரண்டே நிமிட குறுகிய நேரத்தில் செல்லக்கூடியதாக இருக்கும்.