25 வருட பூர்த்தியை கொண்டாடும் ஜனசக்தி இன்சூரன்ஸ் | தினகரன் வாரமஞ்சரி

25 வருட பூர்த்தியை கொண்டாடும் ஜனசக்தி இன்சூரன்ஸ்

இலங்கையின் காப்புறுதித் துறையில் முன்னோடியாக திகழும் ஜனசக்தி இன்சூரன்ஸ், தனது 25வருட பூர்த்தியை கொண்டாடுகின்றது. ஜனசக்தி லைஃவ் இன்சூரன்ஸ் கம்பனி 1994செப்டெம்பர் 15ஆம் திகதி இலங்கையின் விசேடத்துவம் பெற்ற ஆயுள் காப்புறுதி நிறுவனமாக நிறுவப்பட்டது. இலங்கை காப்புறுதியின் தந்தை என அழைக்கப்படும் சி.ரி.ஏ.ஷாப்டரின் சிந்தனையின் வெளிப்பாடாக ஜனசக்தி இன்சூரன்ஸ் நிறுவப்பட்டது. 

ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் தலைவர் பிரகாஷ் ஷாப்டர் கருத்து தெரிவிக்கையில், அனைவருக்கும் காப்புறுதியை பெற்றுக் கொடுப்பது எனும் எமது ஸ்தாபகரின் எதிர்பார்ப்புக்கமைய ஜனசக்தி நிறுவப்பட்டது. ஜனசக்தி எனும் நாமம் மக்களின் சக்தி என்று பொருள்படுகின்றது. நாட்டின் அனைவருக்கும் காப்புறுதியினூடான பாதுகாப்பை பெற்றுக் கொடுக்கும் எதிர்பார்ப்பு இதனூடாக உறுதி செய்யப்பட்டுள்ளது. வாழ்க்கையை மேம்படுத்துவது மற்றும் கனவுகளுக்கு வலுவூட்டுவது எனும் சிந்தனைகளின் அடிப்படையில் சிட்டி விளக்கினூடாக நிறுவனத்தின் அடையாளம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 25வருட காலமாக, பல மில்லியன் கணக்கான இலங்கையர்களின் வாழ்க்கையில் பங்களிப்பு வழங்கியுள்ளதையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்கின்றோம். தினசரி நாம் வளர்ச்சியடைவதுடன், இலங்கையின் மக்களுக்கு நேர்மைத்தன்மையுடன் சேவையாற்றுவது எனும் எமது கோட்பாட்டிற்கு உண்மையாக நாம் திகழ்கின்றோம் என்றார்.  

25 வருடங்களாக எனும் தொனிப்பொருளில் நிறுவனத்தின் 25 வருட பூர்த்தி கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெறுவதுடன், கால்  நூற்றாண்டு காலப்பகுதியில் நிறுவனம் கடந்து வந்த பாதையை கெளரவமாக திரும்பிப்பார்ப்பதுடன் எதிர்கால வளர்ச்சியை வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருக்கும்.

Comments