திருமணமான பெண்களுக்கான உலக அழகிப் போட்டியில் (Mrs. World) இலங்கையைச் சேர்ந்த கரோலின் ஜூரி ‘திருமதி உலக அழகி’ என்ற மகுடத்தை வென்றுள்ளார்.
35வருடங்களுக்கு பின்னர் இலங்கை பெண் ஒருவர் இந்த மகுடத்தை வென்றுள்ளார்.
அமெரிக்காவின் லோஸ் வெகாஸில் நடைபெற்ற 2020 ஆம் ஆண்டுக்கான போட்டியிலேயே இவர் இந்த மகுடத்தை வென்றுள்ளார். 1984 ஆம் ஆண்டு ரோஸி சேனாநாயக்க திருமதி உலக அழகி வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.