இலங்கை - இந்திய மீனவர் விவகாரம் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கை - இந்திய மீனவர் விவகாரம்

இலங்கை - இந்திய மீனவர் விவகாரம் தொடர்பில் இந்த மாத நடுப்பகுதியில் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையே உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா தெரிவித்தார். இது தொடர்பில் தினகரனுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்,  

இலங்கை - இந்திய மீனவர் விவகாரத்தை சுமுகமாகத் தீர்க்க முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும். இரு நாடுகளுக்கும் இடையில் நீண்ட கால உறவு காணப்படுகிறது.எமக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்படாத வகையில் இந்த பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும்.

கடந்த காலத்தில் இருநாடுகளுக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இறுதியாக இந்தியாவில் இருதரப்பு பேச்சுகள் நடைபெற்றன.  

அடுத்த சுற்றுப் பேச்சு இலங்கையில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. அதிகாரிகள் மட்ட மற்றும் மீனவர் சங்க மட்ட பேச்சுக்களும் நடத்தப்படவிருக்கிறது.   வடபகுதி மீனவர்கள் இந்த பிரச்சினையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு சுமுகமான தீர்வு காண தேவையான தலையீட்டை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஷம்ஸ் பாஹிம்

Comments