மிருகக்காட்சி சாலையில் ஒரு நாள் | தினகரன் வாரமஞ்சரி

மிருகக்காட்சி சாலையில் ஒரு நாள்

கொழும்பு தெஹிவளையில் அமைந்துள்ள மிருகக்காட்சி சாலையை பார்வையிட வேண்டுமென்ற எனது நீண்டநாள் ஆசை கடந்த பாடசாலை விடுமுறை காலத்தில் நிறைவேறியிருக்கிறது. ஒரு காலைப் பொழுதில் எனது பெற்றோருடன் தெஹிவளை மிருகக்காட்சி சாலையை பார்வையிடச் சென்றிருந்தோம்.  

அங்கு பல உயிரினங்களைக் கண்டு மகிழ்ந்தேன். மிருகக்காட்சி சாலையின் ஒரு பகுதியில் இருந்த வண்ண வண்ண மீன் இனங்களைக் கண்டுகளித்தேன். பின்னர் பஞ்சவர்ணக் கிளி, பறவைகள், முதலை, மான்கள், வரிக் குதிரை, குரங்குகள், காண்டாமிருகம், யானை, சிங்கம், புலி என பல வகையான உயிரினங்களைக் கண்டுமகிழ்ந்தேன்.  

அங்கு அமைக்கப்பட்டிருந்த நீர்நிலையொன்றில் வாத்துகள் நீந்தி வருவதையும் பெரிய யானைகள் சிறிய நாற்காலிகளில் அமர்ந்து சாகசங்களைச் செய்துகொண்டிருந்தன. இதுபோன்ற பல்வேறு வகையான காட்சிகளை கண்டுமகிழ்ந்தேன். 

லங்கேஷ் ஆனந்தன், தரம் 12,
நோர்வூட் தமிழ் மகா வி., 

நோர்வூட்.  

Comments