ஒவ்வொரு
மனிதரின் வாழ்விலும்
எத்தனை...
துன்ப துயரங்கள்;
அத்துன்ப துயரங்களை,
கண்டு; ஒரு போதும்
துவண்டு போகாமல்
எதிர் நீச்சல் போட்டு,
போராடி வெல்பவனே
வாழ்வில் வெற்றியடைவான்
தோல்வி கண்டு;
துவண்டு போகாதே
மனிதா- நீ
சாகப்பிறந்தவனல்ல
சாதிக்கப் பிறந்தவன்
உன் எண்ணங்களை
உயர்வாக்கு – அப்போது
சிகரகத்தைத் தொட்ட
சீமான்களில் நீயும்
ஒருத்தனாக வரலாற்றில்
இடம் பிடிப்பாய்!
மறந்து போகாதே! – நீ
சாகப் பிறந்தவனல்ல
சாதிக்கப் பிறந்தவன்!
சி. மெளநேஷ், மட்டக்களப்பு