Northshore கம்பஸின் உபவேந்தர் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பேராசிரியர் நாலக ஜயகொடி | தினகரன் வாரமஞ்சரி

Northshore கம்பஸின் உபவேந்தர் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பேராசிரியர் நாலக ஜயகொடி

மிகச் சிறந்த கல்வி வாய்ப்புகளை வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும்   Northshore Campus, தனது செயற்திறனை மேலும் விரிபுபடுத்தும் நோக்கத்துடன் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிறந்த கல்வி சேவையை வழங்கும், பல்வேறு ஆளுமைகளை கொண்டவர் மட்டுமல்லாது சிறந்த வழிநடாத்தும் திறமையை கொண்ட, பல துறைகளில் உள்நாட்டு வெளிநாட்டு அங்கிகாரங்களை கொண்ட போராசிரியர்  நாலக ஐயகொடியை தனது நிறைவேற்று அதிகாரியாக நியமித்துள்ளது. 

புகழ்பெற்ற கல்விமான்களில் ஒருவராக பேராசிரியர் ஜயகொடி திகழ்கின்றார். கல்வித் துறைக்கு இவர் அளப்பரிய பங்களிப்பை வழங்குகின்றார். உயர் கல்வித் துறையில் பரந்தளவு தலைமைத்துவ அனுபவத்தைக் கொண்டுள்ள இவர், முன்னர் CINEC இன் உப வேந்தராக செயலாற்றியிருந்தார். CINEC இல் 1998 ஆம் ஆண்டு விரிவுரையாளராக இணைந்து கொண்ட இவர், சிரேஷ்ட விரிவுரையாளராக, பிரிவின் தலைமை அதிகாரியாக பீடாதிபதியாக மற்றும் பணிப்பாளராக செயலாற்றியிருந்தார்.   அரச மற்றும் தனியார் உயர் கல்வி மற்றும் கடல்சார்ந்த துறையில் தொடர்ச்சியாக தமது பங்களிப்பை வழங்குவதை உறுதி செய்வதுடன், இலங்கை எதிர்காலத்தில் அறிவுசார் மையமாக திகழும் என்பதில் பேராசிரியர் ஜயகொடி உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார்.   கலாநிதி பட்டத்தைப் பெற்று பேராசிரியராக திகழும் இலங்கையின் முதலாவதும் ஒரே Master Mariner ஆவார். அண்மையில், இந்தியாவின், பொருளாதார கற்கைகள் கல்வியகத்திடமிருந்து சர்வதேச தலைமைத்துவ புத்தாக்க சிறப்பு விருது 2019 இவருக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டிருந்தது.   

Comments