இருக்கும்வரை இணைந்திருப்போம் | தினகரன் வாரமஞ்சரி

இருக்கும்வரை இணைந்திருப்போம்

நீயே எனக்குத் துணை   
நானோ உனக்குத்துணை   
நமக்கு நாமே துணை   
ஈசனுக்கோ கருணையில்லை   
ஐந்தாறு பெற்றோம் நாம்   
அழகாக வளர்த்துவிட்டும்   
வயிறாற அதுகள் உண்ண   
வயிறு காய்ந்து நாமிருந்தோம்   
கூட்டுக்குள்ளே பக்குவமாய்   
குஞ்சுகளை வளர்த்து வந்தோம்   
இறகு முளைத்த பருவம் வர   
எல்லாக் குஞ்சும் பறந்து போச்சு   
குலைந்து போச்சு தேகமெல்லாம்   
வீதிக்கு வந்துவிட்டோம்   
வெயிலில் மழையில் அலைகின்றோம்   
இருக்கும் வரை இணைந்திருப்போம்   
இறக்கும் போது இணைந்து போவோம்   
நீ பிரிந்தால் நானுமில்லை   
நான் பிரிந்தால் நீயுமில்லை   
 
மணிமேகலை   
வந்தாறுமூலை

Comments