சிந்தித்து செயல்படுவோம்! | தினகரன் வாரமஞ்சரி

சிந்தித்து செயல்படுவோம்!

எப்போதும் என்மேல்   
எரிச்சல்தான் உங்களுக்கு!   
தப்புச் செய்ய நீங்கள்   
தடுமாறும் போதெல்லாம்...   
தட்டிக்கேட்டுங்களை நான்   
தடுத்து நிறுத்துவதால்...   
எப்போது என்மேல்   
எரிந்துதான் விழுவீர்கள்!   
சிந்தனையை மழுங்கடிக்கும் ஆசை, நீங்கள்   
செல்லுகிற பாதையினசை செப்பம் செய்யா!...   
அந்த இது இந்த இது என்றெல்லாமே   
அனல் மூட்டி உங்களையே அழைத்துச் செல்லும்!   
எந்தவித மானாலும் தொட்டுப் பார்க்க   
எப்படியும் முயற்சித்து ஓடி ஓடி   
முந்திடுவ தன்றி உங்கள் மூளைக் குள்ளே   
முளைக்காது வெறெதுவும்,... முளைத்திடாதே!   
விழுந்துவிழுந் தெழும்வரைக்கும் உசாரா வீர்கள்   
விரைந்துவிரைந் தளைந்திடவே முயற்சிப் பீர்கள்   
பழந்தின்னும் வௌவால்போல் பறக்கு முங்கள்   
பறவாதித் தனம் எதையும் நினைத்தே பாரா!   
தடுமாற்ற மில்லாது விரைந்து ஓடும்   
நினைப்புகளைத் தடுத்து அதனை வெல்லுவோரே   
முழுமனித ராய் இன்னும் வாழு கின்றார்!   
முட்டாள்த் தனங்களினை விட்டுங்கள்!   
 
கலா பூஷணம் 
கல்முனைப் பூபால்

Comments