பகிடிவதை விவகாரம்; தொலைபேசி நிறுவனங்களிடம் தகவலைப் பெற நீதிமன்றம் அனுமதி | தினகரன் வாரமஞ்சரி

பகிடிவதை விவகாரம்; தொலைபேசி நிறுவனங்களிடம் தகவலைப் பெற நீதிமன்றம் அனுமதி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற  பகிடிவதை தொடர்பாக முன்வைக்கப்பட்ட அலைபேசி இலக்கங்களின் விபரங்கள், - தரவுகளை இணைப்பு வழங்குனரான நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள பொலிஸாருக்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.சரவணபவராஜா அனுமதியளித்து உத்தரவிட்டார்.

கிளிநொச்சி வளாக தொழில்நுட்ப பீட நிர்வாகத்தால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் நீதிமன்றில் பொலிஸார் தாக்கல் செய்த குற்றச் செயல் தொடர்பான  அறிக்கைக்கு அமையவே நேற்று முன்தினம் இந்த உத்தரவு வழங்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக தொழில்நுட்ப பீடத்தில் மூத்த மாணவர்கள் சிலர் பகிடிவதை என்ற போர்வையில் புதுமுக மாணவிகள் சிலருக்கு அலைபேசியில் பாலியல் தொல்லை ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

நமது நிருபர்

Comments