அடையாளம் தெரியாத முகம்
அபயமளித்து தவாத கரம்
விடைகாண முடியாத
வினாவள்ளி எறியாத
திறனற்றோர் தருவாரோ உரம்!?
சரியாய் முறையாய் செய்யாய் நீ
தடுத்தால்... முறைப்பும் கொள்வாய் நீ
அதுபோல் இதுபோல் ஏன்போலி...
அசல் தான் உண்மை நீ யோசி!
பலபேர் வருவார் பொய் ஏந்தி
பரிசைப் பெறுவார் அவர் தூசி
சரியும் பிழையும் ஒன்றல்ல...
பிழையைத் தவிர்த்து முன்னேறு!
தப்பில் லாமல் துப்பரவாய்
வாழ்வோர்க் கில்லை எதுவும்
தப்பித் தவறினாலும் – திருந்து
வெற்றி காண்பாய் விரைவில்!
நீலாபாலன்