ஆட்கொல்லி கொரோனா வூகானிலிருந்து உலகுக்கு தாவியது எப்படி? | தினகரன் வாரமஞ்சரி

ஆட்கொல்லி கொரோனா வூகானிலிருந்து உலகுக்கு தாவியது எப்படி?

பெப்ரவரி மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகில் ஏற்படும் ஒவ்வொரு மரணத்துக்கும் சீனாதான் காரணம் என பிரிட்டிஷ் எழுத்தாளரும்இ நகைச்சுவை கலைஞருமான பாட் காண்டெல் கடுமையாக விமர்சித்திருந்தார். அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்ப் கொரோனாவை சீன வைரஸ் என்றே விமர்சிக்கிறார். கொரோனா தடுப்பதில் சீனா காட்டிய அலட்சியம்தான் இன்று உலகம் சந்திக்கும் இந்த நிலைக்குக் காரணம் என உலக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

கொரோனா இந்த உலகுக்கு எப்படிப் பரவியது

சீனாவின் வூகான் நகரத்தைச் சேர்ந்த நான்கு பேர் முதலில் இந்த வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டனர். இந்த நான்கு பேரும் வூகானின் மீன் சந்தைக்கு அருகில் வசித்தவர்கள். இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கமான சிகிச்சை பலனளிக்காது. நிமோனியா காய்ச்சல் இருக்கிறது என்பது மட்டுமே மருத்துவர்கள் அறிந்திருந்தனர்.

டிசம்பர் 31ஆம் திகதி வரை இந்த வைரஸ் குறித்த எந்த எச்சரிக்கையூம் சீன அரசுத் தரப்பிலிருந்து தெரிவிக்கப்படவில்லை. உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையையடுத்து இந்த வைரஸைக் கட்டுப்படுத்திவிடலாம். குணப்படுத்தக்கூடியது” என்று கூறியது சீன அரசு.

கொரோனா வைரஸ் ஒருவரைப் பாதித்தால் அந்த நபரிடம் இருந்து இரண்டு அல்லது மூன்று நபர்களுக்கு பரவும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஜனவரி சீனர்களின் புத்தாண்டு மாதம். இந்த மாதத்தில் சீன வீதிகள் கோலாகலமாக இருக்கும். புத்தாண்டு கொண்டாட்டத்துக்குத் தயாராகும் வகையில் ஆயிரக்கணக்கான மக்கள் வூகான் நகரத்திலிருந்து தங்களது சொந்த நகரங்களுக்குப் பயணமாகத் தொடங்கினர். அப்போதும் சீன அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஜனவரி 21ஆம் திகதியளவில்; ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்துஇ வூகான் நகரம் முடக்கப்படுவதாக சீன அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்தக் காலதாமதமான அறிவிப்பால் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முடியவில்லை. ஏனென்றால் இந்த அறிவிப்புக்கு முன்னரே ஆயிரக்கணக்கான மக்கள் வூகானை விட்டு வெளியேறியிருந்தனர்.

சில நாட்கள் கழித்து மற்ற நகரங்களும் மூடுவதாக சீன அரசு அறிவித்தது. ஆனால், எந்தப் பிரயோஜனமும் இல்லை; உள்ளுரில் வைரஸ் வேகமாகப் பரவத் தொடங்கியிருந்தது. இந்த ஜனவரி மாதத்தில் சர்வதேச விமானப் போக்குவரத்தையும் சீனா அனுமதித்திருந்தது. இதன்மூலம் இந்த வைரஸானது உலக நாடுகளுக்குப் பயணமானது.

வூகான் நகரத்திலிருந்து மட்டும் ஒரு மாதத்துக்கு சுமார் 900 நபர்கள் நியு​ேயார்க் நகரத்துக்குப் பயணமாகிறார்கள். 2,200 பேர் சிட்னிக்கும்இ 15இ000 பேர் பாங்கொக் பயணமாகிறார்கள் என்கிறது ஓர் அறிக்கை. வுகான் மருத்துவ நகரம் என அழைக்கப்படுவதால் ஆசிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் அங்கு கல்வி கற்கிறார்கள். ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் சீனாவூக்குப் பயணமாகிறார்கள். இதையடுத்து, ஜனவரி இறுதியில் வுகான் நகரத்துக்கான விமான சேவையை ரத்து செய்தது சீன அரசு.

பெப்ரவரிமாதம் சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. சீன நகரங்கள் முடக்கப்பட்டன. மக்கள் வீடுகளில் தஞ்சமடைந்தனர். சீனா மீதுதான் உலக மக்களின் கவனம் இருந்தது. மார்ச் மாதம் இந்த நிலை அப்படியே தலைகீழானது. இத்தாலி, ஈரான், தென்கொரியா நாடுகளில் கொரோனா வைரஸ் அறிகுறியூடன் மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இத்தாலியின் நிலைமை தற்போது மோசமாக இருக்கிறது. அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்துவிட்டதாக அந்நாட்டு அரசு கூறுகிறது. மற்ற நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கத்தொடங்கிவிட்டது. இந்தியாவிலும் கொரோனா பரவத் தொடங்கிவிட்டது. 21 நாள் ஊரடங்குக்கு இந்தியப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். பயணங்களைத் தவிர்த்துவிட்டு வீடுகளில் இருந்தாலே கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் அளவு 5 லட்சத்து 32,000 ஆக உள்ளது. இதில் 1 லட்சத்து 23,000 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக இத்தாலியில் கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழந்து வந்த நிலையில், ஸ்பெயின் இத்தாலியை மிஞ்சியது.

ஸ்பெயினில் ஒரே நாளில் மட்டும் 718 பேர் உயிரிழந்தனர். இறப்பு எண்ணிக்கை 4,365 ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயினில் 57,786 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை இல்லாத அளவாக அமெரிக்காவில் ஒரே நாளில் 17,941 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் இத்தாலி சீனாவை பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் மட்டும் 266 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85, 268-ஆகவும், உயிரிழப்பு 935 ஆகவூம் அதிகரித்துள்ளது.

இத்தாலியில் 712 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 8,215 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் 80,589 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஈரானில் 29 ,406 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,234 ஆக அதிகரித்துள்ளது ஃபிரான்ஸில் 29,155 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு 1, 696 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 365 பேரை கொரோனா பலி கொண்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. சீனாவில் இதுவரை 81,285 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3, 287 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மக்கள் இயல்பு நிலைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர்.

Comments