ஞாயிறும் திங்களும் நாடு முழுவதும் ஊரடங்கு | தினகரன் வாரமஞ்சரி

ஞாயிறும் திங்களும் நாடு முழுவதும் ஊரடங்கு

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு, மறுஅறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலிலிருக்கும்.இன்று 24ஆம் திகதியும் நாளை 25ஆம் திகதியும் நாடு முழுவதிலும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நேற்று 23ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8.00மணி முதல் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு மே 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.00மணிக்கு தளர்த்தப்படும்.

இம்மாவட்டங்களில் ஊரடங்கு தினமும் இரவு 8.00மணி முதல் அதிகாலை 5.00மணி வரை மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலிலிருக்கும்.

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு அமுலிலிருந்த போதும் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்காக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டம் இன்றைய தினமும் நடைமுறையில் இருக்கும் அதேநேரம் மே 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் முன்னர் போன்று தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். முன்னர் வெளியிடப்பட்ட அறிவித்தல்களில் குறிப்பிடப்பட்ட ஊரடங்கு சட்டத்துடன் தொடர்புடைய நிபந்தனைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை.

Comments