கொரோனா தொற்று ஒரு கோடியை நெருங்குகிறது | தினகரன் வாரமஞ்சரி

கொரோனா தொற்று ஒரு கோடியை நெருங்குகிறது

உலகில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு  கோடியை நெருங்குகிறது. உலகளவில் 200 நாடுகளுக்கும் மேல் பரவி பெரும்  தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர்  டெட்ராஸ் அதானோம் தெரிவித்துள்ளார். இந்த வைரசால் நாள்தோறும் சுமார் 02 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டு  வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி உலக நாடுகளில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 98,98,220 என்பது குறிப்பிடத்தக்கது.   கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை மிக மோசமாக இருக்குமென உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.   இதனால் பல நாடுகளில் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. சில நாடுகளில் தளர்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு தளர்வுகளால் கொரோனா மீண்டும் வேகமாக பரவக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.  

ஐரோப்பிய நாடுகளில் தொற்று அதிகரிக்கும் என்றும், கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் மோசமாக இருக்குமெனவும், அமெரிக்கா, ஜெர்மனி, ஈரான் உள்ளிட்ட 10 நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.  

இதற்காக தடுப்பூசிகள், பரிசோதனைகள், சிகிச்சைகள் ஆகியவற்றை அதிகளவில், அதிக வேகத்தில் நடத்த வேண்டும். அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதென கூறியுள்ளார். 

Comments