1994 இல் ஏற்பட்ட அதே மாற்றம் 2020 இல் மீண்டும் ஏற்படும். அது அராஜக அரசியலுக்கு முற்றுப்புள்ளி இடும். இந்த அராஜக, அடிதடி அரசியலுக்கு பயந்து ஓடுபவள் அல்ல நான் என அனுஷியா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சிலர் பண பலத்தை பிரயோகித்து பொய்ப் புகார்களை, விமர்சனங்களை என் மீது சுமத்தலாம், ஆனால் உண்மை நிச்சயம் வெல்லும்.
பணத்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி படித்து விட்டு வேலையற்றிருக்கும் எத்தனையோ இளைஞர், யுவதிகள் பலருக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுத்திருக்கலாம். இன்று எத்தனையோ இளைஞர்கள் வெளிமாவட்டங்களில் குடும்பத்தை பிரிந்து கஷ்டபட்டிருக்க தேவையில்லை. இதையெல்லாம் விடுத்து தன் பாராளுமன்ற பதவிக்காக அதிகாரத்தை பயன்படுத்தும் அரசியல்வாதிகள் அகற்றப்பட வேண்டும்.
நாம் நமது சமூகத்தை புதியதாக உருவாக்குவோம். நமக்காக நாம் ஒன்று திரள்வோம். என் மீதான தாக்குதல் கேள்விபட்டதும் எனக்கு தொலைபேசி வாயிலாகவும் குறுஞ் செய்திகள் மூலமாகவும் அன்பை பகிர்ந்த உறவுகளுக்கு நன்றிகள்.