யாசகம் எடுத்து வந்த கோடீஸ்வரர் கைது | தினகரன் வாரமஞ்சரி

யாசகம் எடுத்து வந்த கோடீஸ்வரர் கைது

பொலிஸாரின் விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் அருகே யாசகம் எடுக்கும் போது, தள்ளு வண்டியைத் திருடியதற்காக காவலில் வைக்கப்பட்டுள்ள நபர், மஹகரகம பமுனுவ பகுதியில் வசிக்கும் கோடீஸ்வரர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடலோர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

இப் பிச்சைகாரரின் சொகுசு மாடி வீட்டின் தோட்டத்தில் ஒரு வெகன் ஆர் கார் மற்றும் ஒரு சொகுசு காரையும் பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர்.

வீட்டின் மேல்மாடியை வாடகைக்கு கொடுப்பதன் மூலம் மாத வருமானம் ரூபா 30,000மற்றும் பிச்சை எடுப்பதில் தினசரி வருமானம் ரூபா 5,000கிடைத்துள்ளது.   

கொழும்பு – கொச்சிக்கடை ஜம்பட்டா வீதியில் ரூபா 20,000மதிப்புள்ள பழங்களை ஏற்றிய தள்ளு வண்டியை திருடியதாக புகார் வந்ததையடுத்து, சி.சி.டி.வி கமரா வீடியோவை அவதானித்த பொலிசார் (23) நபரை கைது செய்துள்ளனர். சி.சி.டி.வி கமரா வீடியோவில் வண்டியைத் தள்ளுவதும், பின்னர் தேவாலயத்தின் அருகே பிச்சை எடுப்பதில் வழக்கமாக ஈடுபட்டுவதும் பதிவாகியுள்ளதை பொலிசார் கண்டறிந்துள்ளனர்.வண்டியை தனது வீட்டுக்கு கொண்டு வர ஒரு நபருக்கு ரூ 5,000கொடுத்துள்ளார்.

இச் சம்பவம் குறித்து கடலோர பொலிஸ் குற்றப்புலனாய்வுத் தலைமை அதிகாரி ஜயந்த குமார தலைமையிலான பொலிஸ் குழு விசாரணை நடத்தி வருகிறது 

Comments