சம்பளம் பெறமுடியாத நிலையில் பட்டதாரிகள் | தினகரன் வாரமஞ்சரி

சம்பளம் பெறமுடியாத நிலையில் பட்டதாரிகள்

ஒழுங்கில்லாத நியமனம் வழங்கிய ஐ.தே.க

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் பட்டதாரிகளுக்கும் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கும் தேர்தலை மாத்திரம் கருத்தில் கொண்டு சரியான ஒழுங்கமைப்பில் வேலைவாய்ப்பு வழங்காததால் தேர்தலின் பின்னர் சம்பளம் பெறமுடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளதென வெகுஜன ஊடகத்துறை தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்  குறிப்பிட்டார். ஜனாதிபதித் தேர்தல் முன்பே ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவே சுமார் ஒரு இலட்சத்து 6௦ ஆயிரம் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளது என்றார்.

அமைச்சர் நேற்றுமுன்தினம் மட்டக்களப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,... ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பே ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவே சுமார் ஒரு இலட்சத்து 6௦ ஆயிரம் இளைஞர்,யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு வசதிகளை வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளது எனக் குறிப்பிட்டார்

மட்டக்களப்பு சுழற்சி நிருபர்

Comments