மட்டக்களப்பில் வாள்வெட்டு குழுவின் தலைவருடன் இருவர் கைது | தினகரன் வாரமஞ்சரி

மட்டக்களப்பில் வாள்வெட்டு குழுவின் தலைவருடன் இருவர் கைது

மட்டக்களப்பு வாள்வெட்டு குழு வின் தலைவர் தனு உட்பட இருவரை வாள்கள் மற்றும் கைக்குண்டுடன்  நேற்று முன்தினம் கைது செய்து ள்ளதாக மட்டு. தலைமையக பொலிசார் தெரிவித்தனர். மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள நாற்கேணி மற்றும் ஊறணி பகுதிகளில் தொடர்ச்சியாக வாள்வெட்டு மற்றும் கஞ்சா வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் வாள் வெட்டுக்குழு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் பெண்கள் தனிமையில் வீடுகளில் இருக்க முடியாத நிலை மற்றும் மக்களை அச்சுறுத்தி வருவதாகவும் இக் குழுவால் தங்களுக்கு உயிர் ஆபத்து ஏற்படும் என மக்கள் பொலிசில் முறைப்பாடு செய்திருந்தனர். 

இது தொடர்பில் பொலிசாருக்கு நீண்ட காலமாக முறைப்பாடுகள் கிடைத்து வந்துள்ளன. இந் நிலையில் புலனாய்வுத்துறையினருக்கு வாள்வெட்டு குழு பற்றி அறிவித்ததையடுத்து புலனாய்வுத்துறையினர் தொடர்ச்சியாக இவர்கள் தொடர்பாக தகவல்களை திரட்டிவந்துள்ள நிலையில் (11) மாலை நாவற்கேணி பிரதேசத்தில் வாள் வெட்டுக்குழுவின் தலைவர் தனு வாளுடன் மக்களை அச்சுறுத்தி வருவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.கே. ஹெட்டியாராச்சியின் ஆலோசனையில் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் சப் இன்பெஸ்டர் முகமட், பொலிஸ் சார்ஜன் கிருபா தலைமையிலான பொலிஸ் குழுவினர் அவரை கைது செய்ய முற்பட்டபோது அவர் பொலிசார் மீது வாளால் வெட்ட முற்பட்டுள்ளார். 

அதிரடியாக பொலிசார் சுற்றிவளைத்து அவரையும் அவரது சாகாவான சாந்தன் ஆகிய இருவரை கைது செய்ததுடன் தனுவின் இடுப்பிலிருந்து கைக்குண்டு, வாள் ஒன்றையும் மீட்டுள்ளனர்.

Comments