அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தின் போது முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியான மு.காவின் கருத்துக்களை நாடவில்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. தற்போது 20ஆவது திருத்தச் சட்டத்தில் அதிகமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமையால் தனது கட்சி அதற்கு உடன்பாடில்லையென அக்கட்சியின் பிரதிச் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
உத்தேச மசோதாவுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல தமது கட்சி எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.