மழலைச் செல்வமே
உன் தளிர் கரங்களால்
வருடுகையில்
கிடைக்கும் சுகத்துக்கு
அமுதமும் ஈடாகுமோ
மெல்லிதழை விரித்து
உதிர்க்கும் புன்னகைக்கு
சோலை மலர்கள் கூட
தோல்வி காணுமே
பிஞ்சுக் கால்களால்
கன்னத்தை உதைத்து
நீ தரும் இன்பம்
ரோசாவின் தடவலாய்
குளிர்விக்கிறதே இதயத்தை
உன் சிணுங்கலும்
கலீர் சிரிப்பும்
இன்னிசையாய்
தழுவுதே செவியோரம்
நீ தரும் இன்பத்துக்கு
எல்லையில்லையே!
அலிறிஸாப், அக்குறணை