சினிமா நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கையாகிவிட்டது. சில நேரங்களில் பொலிஸ் நடவடிக்கை வரை செல்வது அவ்வப்போது நிகழும் சம்பவமாகிவிட்டது.
சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக, கவர்ச்சியாக புகைப்படம், வீடியோ பதிவிடுவிட்டு சர்ச்சைகளில் சிக்கும் நடிகைகளும் உண்டு. சிலர் பட வாய்ப்புகளுக்காக இதை வாடிக்கையாக செய்வதும் உண்டு.
அதிகமாக கவர்ச்சி வீடியோ, புகைப்படம் எடுத்து வெளியிடும் நடிகை பூனம் பாண்டே கோவாவில் உள்ள நீர்தேக்கம் அருகில் நின்று கொண்டு தன் ஆடைகளை களைந்து நிர்வாணமாக போஸ் கொடுத்து வீடியோ எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட பெரும் சர்ச்சையாகியுள்ளது.
கோவா முன்னேற்ற கழக மகளிர் அணியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் அளித்துள்ளனர்.
இதனால் அந்நடிகையை பொலிசார் கைது செய்துள்ளனர்.