உதிர்ந்த பூமொட்டு | தினகரன் வாரமஞ்சரி

உதிர்ந்த பூமொட்டு

ஒன்றாம் வயதினிலே 
உதிர்ந்த பூமொட்டு 
என்னடா செய்தது 
பாவம் 
அது  
பெண்ணாகப் பிறந்ததா 
பாவம் 
பொன்னாக மதித்திடும் 
பூவையர் வாழ்வுக்கு 
பூமியில் யாரடா 
காவல் 
உன்னைப் போல் 
மிருகங்கள் 
மண்ணிலே வாழ்வது 
இவ்வுலகிற்கே அடுக்குமா 
நீ சொல் 
பாத அணிகலன் 
உன் 
தோளிலே தான் இட்டு 
ஊர் வலம் எடுப்பாரா 
பெரியோர் 
கொஞ்சமும் தயவின்றி 
கொடும் பாவியென்றுன்னை 
சந்தியில் எரியாரோ 
நல்லார் 
எரித்தாலும் புதைத்தாலும் 
பாவியுன் எச்சத்தை 
புவி ஏற்குமா மறுக்குமா 
நீ சொல்!

இராணி பெளசியா  

Comments