1000 ரூபா என்ற பேச்சில் எவ்வித மாற்றமுமில்லை | தினகரன் வாரமஞ்சரி

1000 ரூபா என்ற பேச்சில் எவ்வித மாற்றமுமில்லை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை நிச்சயம் பெற்றுக்கொடுப்போம் என வெளிவிகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று  நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை நிச்சயம் பெற்றுக்கொடுப்போம். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை விமர்சிக்காது, பெற்றுக்கொடுப்பதற்கு எதிரணி ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

ஆயிரம் ரூபா தொடர்பில் அமரர்.ஆறுமுகன் தொண்டமான் பல சுற்றுப்பேச்சுகளை நடத்தியிருந்தார். 950 ரூபாவரை இணக்கப்பாடுகள் பொதுத் தேர்தலுக்கு முன்னர் எட்டப்பட்டிருந்தன. அத்தருணத்திலேயே அமைச்சர் தொண்டமான் உயிரிழந்திருந்தார்.

சம்ஷ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்


 

Comments