கதையும் காரணமும் | தினகரன் வாரமஞ்சரி

கதையும் காரணமும்

நல்லதைச் சொன்னால்
நடிப்புக்காரன் என்கிறார்கள்
சத்தியத்தைப் பேசினால்
சாகசக்காரன் என்கிறார்கள்
கற்றோருடன் கதைத்தால்
மேதாவி என்கிறார்கள்
அரசியல்வாதியோடு பேசினால்
காக்காய்பிடிக்கிறான் என்கிறார்கள்
செல்வந்தனோடு நின்றால்
பெருமைக்காரன் என்கிறார்கள்
பெண்களோடு பேசினால்
காமன் என்கிறார்கள்
பனைமரத்தின் கீழிருந்து
பால் குடித்தது போல்தான்
கதையும் காரணமும்

அலிறிஸாப், அக்குறணை

Comments