கல்கிஸ்ஸ ஹோட்டல் ஒன்றில் ரிசாட் சுயதனிமைப்படுத்தலில் | தினகரன் வாரமஞ்சரி

கல்கிஸ்ஸ ஹோட்டல் ஒன்றில் ரிசாட் சுயதனிமைப்படுத்தலில்

கடந்த 25 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கல்கிஸ்ஸ ஹோட்டலில்  சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

நீதிமன்ற பிணை உத்தரவின் பின்னர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதன் முடிவுகளின் அடிப்படையில், அவருக்கு கொரோனா தொற்று  இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே அங்கிருந்து, அரசாங்கம் தனிமைப்படுத்தல் நிலையமாக அறிவித்துள்ள கல்கிஸ்ஸ ஹோட்டல் ஒன்றுக்கு மாற்றப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீன், தற்போது சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

2019 ஜனாதிபதித் தேர்தலின் போது, புத்தளத்திலிருந்து 222 இ.போ.ச. பஸ்களில் 12,000 இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு சிலாவத்துறை பகுதிக்கு, வாக்களிக்கச் செல்ல போக்குவரத்து வசதிகளை செய்துகொடுத்தமை ஊடாக, நீண்டகாலமாக இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்துவதற்கான திட்டத்தின் 9.5 மில்லியன் ரூபாவை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பிலான விசாரணைகள் கடந்த 25 ஆம் திகதி கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, முன்வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கைகளை ஏற்று ரிஷாத்துக்கு பிணை வழங்கப்பட்டது.

Comments