சோதனைத் தீ
சுடும் போதும்
வேதனைத் தணலில்
வெம்பும் போதும்
நான் –
கூறுகிறேன்
வாழ்வு பொய்யென்று
சோகம்
கலவை செய்யப்பட்ட
நிதம் –
கன்னம் நனையும்
நிம்மதியற்ற வாழ்வு
கோபம் –
இஃது எனக்கு
அவசியமானது
சமூகத்தின்
வார்த்தைக் கீறல்களால்
இரத்தத்தி னூடே
உள்ளத்தில் ஊறிய
கொதிக்கும் ஊற்று
நான் – மெளனியாக இருப்பதாலும்
தனிமை தேடியதாலும்
என்னை –
சொல் அம்புகளால்
வருத்துகிறது மனிதம்
அப்போதும் –
மௌனமே
எனது மொழி
இந்த-
மானுடத்தின்
கண்களிலிருந்து
நீண்ட தூரம்
சென்று வாழ வேண்டும்
இது – என்
நாளாந்தத் துடிப்பு
ஏன்?
என்ற கேள்வியிலேயே
எனது சோகம்
எழுந்திருக்கிறது
எனக்குப் புரியவில்லை
மனிதம் வெறுப்பது
சமுதாயம்
என்னை மதியாவிட்டது
இல்வாழ்க்கை
எனக்கு
அஸ்தமனம்
திக்குவலை ரிஸ்மியா மஸூத்