சவால் விடும் சுதேச வைத்தியர் சம்பத் | தினகரன் வாரமஞ்சரி

சவால் விடும் சுதேச வைத்தியர் சம்பத்

கொரோனா வைரஸை முற்றிலுமாக அடக்கும் ஒரு சுதேச மருந்தை உருவாக்கியுள்ளதாக சுதேச மருத்துவர் ஒருவரான கலுதரேஜ் சம்பத் பெர்னாண்டோ என்பவர் தெரிவித்துள்ளார்.

பண்டைய மருத்துவ பரிந்துரைகளின்படி தயாரிக்கப்படும் சுமார் 24 வகையான ஔடதங்கள் இதில் உள்ளன என்றும் அவர் கூறினார்.

இந்த மருந்தை மக்கள் ஏற்கனவே உலகின் பல்வேறு நாடுகளுக்கு எடுத்துச் சென்றுள்ளனரென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட ஒருவர் இதைப் பருகினால், அவர் 03 நாட்களில் முழுமையாக குணமடைவாரென்றும், பாதிக்கப்படாத ஒருவர் இதைப் பருகினால், அவருக்கு வைரஸ் தொற்று ஏற்படாதென்றும் அவர் கூறுகிறார்.

பண்டாரநாயக்க ஆராய்ச்சி நிறுவனம் இதை ஆய்வு செய்து அதற்கான சான்றிதழை வெளியிட்டுள்ளதாகவும், இதுவரை சுமார் 150 பாதிக்கப்பட்டவர்கள் குணமாகியுள்ளதாகவும் அவர் கூறினார். பாதிக்கப்பட்ட நபர் மருந்து உட்கொண்ட மூன்று நாட்களுக்குள் குணமடையவில்லையென்றால் நான் தற்கொலை செய்து கொள்வேனென்றும் அவர் கூறினார்.

Comments